மாயமான சிறுமி தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு உதவி கோரிய பொலிஸ்
ஒன்ராறியோவின் லண்டனில் மாயமான 14 வயது சிறுமி தொடர்பில் பொலிசார் புகைப்படம் வெளியிட்டு தேடி வருகின்றனர்.
14 வயதான அலிஸா உசேன் கடைசியாக ஹூரான் மற்றும் சாண்ட்ஃபோர்ட் வீதிகளில் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் எப்போது குறித்த பகுதிகளில் காணப்பட்டார் என்பது தொடர்பில் பொலிசார் குறிப்பிடவில்லை. மாயமான அலிஸா உசேன், ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்,
125 பவுண்டுகள் எடை இருக்கலாம் எனவும், தோள்பட்டை வரை நீளமான கருப்பு முடி கொண்டவர் எனவும் அவருக்கு பழுப்பு நிற கண்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடைசியாக அவர் கருப்பு நிற sweatpant, கருப்பு சட்டை மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருந்தார் என தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் லண்டன் காவல்துறையை நாட கேட்டுக்கொண்டுள்ளனர்.