இந்திய இளைஞரின் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த கனேடிய பொலிஸ்
ஒன்ராறியோவின் லண்டனில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களை பொலிசார் எச்சரித்துள்ளனர்.
லண்டன் பொலிசார் பொதுமக்களின் நலன் கருதி 22 வயதான சரண்ஜீத் சிங் என்ற இந்திய இளைஞரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் Western University வளாகம் அருகே அக்டோபர் 18 மற்றும் 19ம் திகதிகளில் மூன்று பெண்களை குறித்த இளைஞர் அணுகியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று விவகாரத்திலும் சரண்ஜீத் சிங் ஈடுபட்டுள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட, சரண்ஜீத் சிங் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
நீதிமன்ற விசாரணைக்கு திகதி குறிப்பிட்ட பின்னர், குறித்த இளைஞரை பிணையில் விடுவித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 23ம் திகதி கருப்பு நிற Honda Civic கார் ஒன்று தம்மை தொடர்வதாக கவனித்த பெண் ஒருவர், சட்டென்று அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாதுகாப்பு கருதி நுழைந்துள்ளார்.
ஆனால் அந்த Honda Civic நபர் கதவில் பலமுறை பலமாக தட்டிய பின்னர், காருக்கு அருகாமையில் காத்திருந்துள்ளார். இதனிடையே குறித்த பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட மீண்டும் வாகனத்தில் தொடர்ந்து சென்று பெண்களை அச்சுறுத்தியுள்ளார். இதுவரை பெண்கள் எவரும் அந்த இளைஞரால் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கவில்லை எனவும், அந்த இளைஞரை தங்களுக்கு அறிமுகம் இல்லை எனவும் புகார் அளித்துள்ள பெண்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர் சரண்ஜீத் சிங் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என லண்டன் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.