கனடாவில் போப் உருவச்சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
வடக்கு மத்திய எட்மண்டனில் உள்ள புனித ஜெபமாலை கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே போப் இரண்டாம் ஜான் பால் உருவச்சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவோடு இரவாக சிவப்பு மை கொண்டு கை அடையாளம் பதிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில் எட்மண்டன் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
மட்டுமின்றின், தொடர்புடைய தேவாலயத்தின் முகப்பு வாயிலிலும் மர்ம நபர்கள் சிவப்பு கை அடையாளங்களை பதித்து சென்றுள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 11.10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பெண் ஒருவர் பொலிசாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சம்பவப்பகுதியில் விசாரணை முன்னெடுத்த பின்னரே இதன் பின்னணி தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, எட்மண்டன் கத்தோலிக்க பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் வெளியிட்ட அறிக்கையில், திருத்தந்தை உருவச்சிலை மீதான இந்த தாக்குதல் சம்பவம் தேவாலயத்தை வருத்தமடைய செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.