தீ கோளமான விமானம்... கடைசி நொடியில் எடுத்த முடிவால் இறந்தும் கொண்டாடப்படும் விமானி
ரஷ்யாவின் பிரபல ஊடகவியலாளர் தமது மனைவியுடன் பயணித்த விமானமானது நடுவானில் நெருப்பு கோளமாக மாறி விபத்தில் சிக்கியுள்ள சம்பவத்தில், அவர் இறந்தும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
குறித்த விபத்தில் கணவன் மனைவி இருவருமே மரணமடைந்துள்ளனர். விமானியும் ரஷ்ய ஊடகவியலாளருமான அலெக்சாண்டர் கோல்டோவாய், தமது ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் நடுவானில் தீப்பற்றிக்கொள்ள, அவசரமாக தரையிறக்க மொத்த முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.
இறுதியில், கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயல்வெளி ஒன்றில் விழுந்து புகை மூட்டத்தை எழுப்பியுள்ளது. மேலும், விமானமானது குடியிருப்பு பகுதியில் விழுந்து மோதாமலிருக்க,
தன்னால் முயன்ற அனைத்தையும் அலெக்சாண்டர் கோல்டோவாய் முன்னெடுத்துள்ளதாகவும், அதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் 41 வயதான அலெக்சாண்டர் கோல்டோவாய் மற்றும் அவரது மனைவி என இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதனிடையே தீயில் கருகிய நிலையில், இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் இந்த அலெக்சாண்டர் கோல்டோவாய். அவருக்கென தனியாக ரசிகர் பட்டாளம் கொண்டவர் என்பதால், இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, 2020 நவம்பர் 7ம் திகதி நடந்த இந்த விபத்து தொடர்பில், அவரது அந்த கடைசி நொடி முடிவும், அவர் இறந்தும் அப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார்.