கனேடிய நகரம் ஒன்றில் நீரில் மூழ்கிய நபர் மாயம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
கனேடிய நகரம் ஒன்றில் நீரில் மூழ்கிய ஒருவர் மீண்டும் வெளியே வராததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. பொலிசாருக்கு இது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான அந்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கால்கரிக்கு கிழக்கே அமைந்துள்ள Chestermere என்ற நகரில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் துடுப்பு படகு ஒன்றில் இருவர் பயணித்த நிலையில், அந்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்துள்ளது.
அப்போது, அந்த படகில் பயணித்த இருவரும் தண்ணீரில் மூழ்க, 20 வயதுகளிலிருக்கும் ஒருவரை, நீந்திக்கொண்டிருந்த மற்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுபிவைத்துள்ளனர்.
ஆனால், 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டாவது நபர் தண்ணீரில் விழுந்ததற்குப் பின் தண்ணீர் பரப்புக்கு வரவேயில்லை. நேற்று இரவு 10,15 வரை அவர் கிடைத்ததாக தகவல் இல்லை. மீட்புக்குழுவினர் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.