ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் வீதிகளில் அடைக்கலம்
ஜப்பான் நாட்டின் காகோஷிமா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.05 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம், 29.4 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 129.4 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் 20 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தாக கூறப்படுகினறது.
குறித்த நிலநடுக்கத்தால் மக்களிடையே சிறிது நேரம் பீதி நிலவியது. இதனால் மக்கள் வீடுகளையும், இன்ன பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.