ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்
தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் செம்னான் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்க் நகரைச் சுற்றி நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.