பிரான்ஸில் அதிவேக ரயிலில் குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!
பிரான்ஸில் அதிவேக ரயிலொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசிவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த வார இறுதியில் பாரிஸுக்கும் ஸ்ட்ஸ்போக் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயிலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனக்கு பிரசவ வலி ஏற்பட்டமை குறித்து ரயில் அதிகாரிகளுக்கு அப்பெண் தெரிவித்ததையடுத்து, மருத்துவக் குழுவினர் ரயிலில் ஏறுவதற்காக லொரைன் ரஜிவி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் மருத்துவக் குழுவினரின் உதவியுடன் அப்பெண் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார் என பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாயும் குழந்தையும் அருகிலுள்ள வைத்தியசலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.