கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானதா? வெளியான முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளும் செலுத்திக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கும் உள்ள நிலையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று ஆராய்ச்சியில் மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கருவுக்கும் நஞ்சு கொடிக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவுவதற்கு 70 சதவீதம் கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் 10% கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.