பிரபல நாடு ஒன்றின் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி!
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு (Ferdinand Marcos) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த 30-ம் திகதி பதவி ஏற்றவர், பெர்டினாண்ட் மார்கோஸ் (வயது 64). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அவரது ஊடக செயலாளர் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று (08-07-2022) மணிலாவில் நிருபர்களிடம் அறிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்தது,
"ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுக்கு லேசான காய்ச்சல் உள்ளது, மற்றபடி நலமாக உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ தொற்று இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.