ரஷ்யாவிடம் மீண்டும் உதவி கோரிய இலங்கை ஜனாதிபதி!

Shankar
Report this article
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எரிபொருள் இறக்குமதி செய்ய கடனுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நாடுகளின் உதவியை அந்த நாடு நாடி வருகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கடனுதவியாகவும், எரிபொருள் உதவியாகவும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்ய அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசி வருகிறார்.
அந்தவகையில் நேற்று (07-07-2022) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டு பேசினார்.
[HTEDGM ]
அதன்போது மாஸ்கோவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய கடனுதவி வழங்குமாறு புடினிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் ரஷ்ய விமான நிறுவனமான ஏரோபிளாட்டை மீண்டும் இலங்கையில் இருந்து இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
புடினுடனான இந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.