கொழும்பில் உள்ள முக்கியமான இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!
கொழும்பில் இடம்பெற்றுவரும் புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் (22-09-2022) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 16-ம் திகதி ஆரம்பமான இந்த புத்தகக் கண்காட்சி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
75ஆவது சுதந்திர தினத்தில் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரியவகை நூல்கள், வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த ஆவணங்கள் அந்த புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள அந்த புத்தக கண்காட்சிக்கு இலங்கை புத்தக பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவையும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.