கெரி ஆனந்தசங்கரியை புகழ்ந்து பாராட்டிய பிரதமர்
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கெரி ஆனந்தசங்கரி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
கனடாவின் புது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி மிகவும் நேர்மையானவர் எனவும் தனது கடமையை சிறந்த முறையில் மேற்கொள்பவர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரி தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வாறு நேர்மை தன்மையுடன் நடந்து கொள்வார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக கெரி ஆனந்த சங்கரி தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தி இந்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதன் போது ஆனந்த சங்கரி மிகவும் நேர்மையான முறையில் தனது பதவியின் கடமைகளை செய்து வருவதாகவும் எந்த இடத்தில் எதனை செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவுடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனவே தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனந்தங்கரி நீதி அமைச்சராகவும் நாட்டின் சட்ட மா அதிபராகவும் கடமையாற்றிவர் எனவும் எனவே அவரது பதவி தொடர்பில் தெளிவுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.