ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ
ஆசிய பெண்களைக் குறிவைத்து செவ்வாயன்று அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பேசியது. கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதை நாங்கள் கண்டோம் என பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இந்த அறியாமை, வன்முறை மற்றும் பாரபட்சமான நடத்தைக்கு கனடாவில் அல்லது உலகில் எங்கும் இடமில்லை என்றும் அதற்கு எதிராக நாம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். எம்.பி. மேரி என்.ஜி.யின் டுவீட்டை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
அதில் மேரி, இப்போது, ஆசிய கனடியர்களுக்கு அவசரமாக உங்கள் உதவி தேவை. கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளன. ஆனால், இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தடுப்பூசி எங்களிடம் இல்லை எனபதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து இணையத்தில், ஆசிய எதிர்ப்பு இனவெறியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக, இடுகைகள் குவிந்துள்ளன.
மேலும் அதில் டான் லெவி போன்ற பிரபலங்களும் தங்கள் ஆதரவை முன்வைத்துள்ளனர்.