பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை அமுல்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
லிபியாவின் மறைந்த தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான யூரோக்களைப் பெற்றுக் கொண்டு, அதனை 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக சர்கோசிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்தத் தண்டனை வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.