சிறைச்சாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கைதி!
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ப்
பிரித்தானியாவில் ஹிண்ட்லி நகரை சேர்ந்தவர் டென்னிஸ் ஸ்மலி. 70 வயதான இவர் 1970-ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் தொடர் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து பல பெண்களையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது 25 கற்பழிப்பு வழக்குகள் உள்பட மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தனர்.
இதைதொடர்ந்து டென்னிஸ் ஸ்மலி மீதான வழக்குகள் லிவர்புல் நகரின் வாக்பில்ட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணையில் முடிவில் டென்னிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால், அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளியான டென்னிஸ் ஸ்மலி வாக்பில்ட் நகரில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிக்கு கடந்த பிப்ரவரி 25-ம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட போது டென்னிசுக்கு கடந்த மார்ச் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து டென்னிஸ் மார்ச் 11-ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் மார்ச் 16-ம் திகதி உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகம் கடந்த (15) திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.