உடையால் ஏற்பட்ட சிக்கல்; நாடு கடத்தப்படும் அபாயத்தில் திருநங்கை
பெண் உடை உடுத்தியதற்காக திருநங்கை ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார். Nur Sajat (35) வயதான அந்த திருநங்கை, மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தினாராம்.
இந்நிலையில் மலேசியாவில், திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது.. இதனையடுத்து , Nur மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். எனினும் , அவர் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவரை மலேசியாவுக்கு நாடுகடத்துமாறு அதிகாரிகள் தாய்லாந்தை வற்புறுத்தி வருகிறார்கள். ஒருவேளை அவர் நாடு கடத்தப்பட்டால் மலேசியாவில் அவர் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அதுவும் ஆண்கள் சிறையில் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனக்கு ஏராளம் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல அஞ்சுவதாகவும் தன்னை சமூக ஊடகம் ஒன்றில் பின்தொடரும் 312,000 பேருக்கும் Nur அச்சம் வெளியிட்டுள்ளார்.
அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்படுவாரானால் மோசமாக நடத்தப்படுவார் என்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவார் என்றும் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், அவுஸ்திரேலியாவில் அவருக்கு புகலிடம் அளிக்குமாறு கோரியுள்ளனர்.