ஒன்ராறியோ லிபரல் கட்சி அளித்துள்ள வாக்குறுதி!
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், ஒரு நாளைக்கு 10 டொலருக்கு, உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு வசதி உருவாக்கப்படும் என்று ஒன்ராறியோ லிபரல் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
ஒன்ராறியோவில் 1 பில்லியன் டொலர் மதிப்பில், குறைந்த செலவில் குழந்தை பராமரிப்பு வழங்கும் திட்டத்தை லிபரல் கட்சி வெளியிட்டுள்ளது.
உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்புக்கான சராசரி கட்டணத்தை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு நாளைக்கு 50 டொலரில் இருந்து 10 டொலராகக் குறைக்க சமஷ்டிப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், லிபரல் கட்சி கூறியுள்ளது.
இதன் மூலம் ஒரு குழந்தைக்கு சுமார் 10,000 டொலர்களை சேமிக்க முடியும் என்றும் ஒன்ராறியோ லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.