ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வாருங்கள்: கனேடிய மாகாண பெண் ஒருவர் கோரிக்கை
கனடாவில் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என கொரோனாவில் இருந்து மீண்ட பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கண்டிப்பாக 2 வார காலம் ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் ஷெடியாக் கேப் பகுதியை சேர்ந்த டெபி கிளெமென்ட்ஸ்.
கொரோனா பரவலை எதிர்கொள்ள நாம் போதுமான அளவுக்கு எதையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன் என தெரிவித்துள்ள கிளெமென்ட்ஸ், நமது தேவை என்ன என்பதை புரிந்து கொள்வதில் அரசுக்கும் அக்கறை இல்லை என்றார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்து சுமார் 18 மாதங்கள் கடந்தும், தற்போதும் அதன் பக்கவிளைவுகளை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மாகாண நிர்வாகத்தின் இயலாமை தான் கொரோனா நான்காவது அலையை நாம் எதிர்கொள்ளும் நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார் கிளெமென்ட்ஸ்.
மாகாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 2 வார காலம் ஒட்டுமொத்த மாகாணத்திலும் ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்கிறார் அவர்.
ஆனால் ஊரடங்கால் மட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார் முதன்மை சுகாதார அதிகாரி.