கொலைச் சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தில் நடந்த கொலைக் குற்றம் தொடர்பாக தேடப்பட்டு வரும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு, கனடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், மத்திய லாப்ரடோர் பகுதியில் உள்ள 'ஹப்பி வேலி-கூஸ் பே' என்ற நகரில் பிரான்ஸ் ட்ரோஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, கியூபெக்கின் ஷெர்ப்ரூக் நகரைச் சேர்ந்த 30 வயதான டேவிட் ஃபௌஷர் (David Faucher) என்ற நபர் தேடப்பட்டு வருகிறார். அவர் பொலிஸாரிடம் சிக்காமல் "தீவிரமாகத் தலைமறைவாகி வருகிறார்" என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான ஃபௌஷர், தனது சொந்த ஊரான ஷெர்ப்ரூக் தவிர, துவா-ரிவியர் (, மொன்றியால் மற்றும் மெக்சிகோ ஆகிய இடங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர்.
உயரம்: 5 அடி 11 அங்குலம், எடை: சுமார் 190 பவுண்டுகள், கண் நிறம்: , பழுப்பு நிறம் , பயன்படுத்தும் வாகனம்: சாம்பல் நிற '2026 செவ்ரோலெட் சில்வராடோ' ரக பிக்கப் ரக் வாகனம், வாகன இலக்கத் தகடு: FTV 8960 என குறித்த நபர் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.
"பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சந்தேக நபரான ஃபௌஷரை எவரும் நேரடியாக அணுக வேண்டாம்," என பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளனர்.
குறித்த நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தாலோ அல்லது அவர் பயணிக்கும் வாகனத்தைக் கண்டாலோ, உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கோ அல்லது நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் பிரதான குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு 709-772-5433 என்ற இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தித் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.