215 சிறார்கள் பேரில் 215 கி.மீ... பூர்வக்குடி மக்களுக்காக சைக்கிள் பயணம்
கம்லூப்ஸ் உண்டுறை பள்ளி விவகாரத்தில் தப்பிப்பிழைத்தவர்களுக்காக பென்டிக்டன் குடியிருப்பாளர்கள் இருவர் சைக்கிள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
கம்லூப்ஸ் முன்னாள் இந்திய உண்டுறை பள்ளி விவகாரம் கனேடிய மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்று போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பென்டிக்டன் குடியிருப்பாளர்கள் இருவர் தெற்கு ஒகனகன் பகுதியில் இருந்து கம்லூப்ஸ் வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டு நிதி திரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
இந்த முயற்சியால் 2,150 டொலர் வரையில் திரட்ட முடியும் என இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Linda Goff மற்றும் Paul Varga ஆகிய இருவருமே 215 சிறார்களுக்காக 215 கி.மீ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை வரை 1,110 டொலர்கள் திரட்டியுள்ளனர். இவர்களின் பயணம் ஜூன் 19-20 வரையில் நடைபெறும் என்றே தெரிய வந்துள்ளது.
பென்டிக்டனில் இருந்து கம்லூப்ஸ் வரை 230 கி.மீ என சுட்டிக்காட்டியுள்ள இருவரும், ஆனால் மகத்தான ஒரு செயலுக்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
பயணத்தின் இரண்டாவது நாளிலேயே, அவர்கள் திட்டமிட்டிருந்த தொகையின் பாதி அளவுக்கு நன்கொடையாக கிடைத்திருப்பது மக்களின் தாராள குணத்தை காட்டுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் மட்டுமே 215 டொலர் நன்கொடையாக அளித்துள்ளார் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.