நாட்டை விட்டு சற்று முன் தப்பியோடினார் கோட்டாபய! உத்தியோகபூர்வ தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அதிகாலையில் ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் ராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
#BREAKING NASA releases next wave of images from James Webb Space Telescope pic.twitter.com/lGrK1DQQGq
— AFP News Agency (@AFP) July 12, 2022
எவ்வாறாயினும், இந்த விமானம் மாலத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாக மோதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ,குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என Tamil Guardian செய்தி வெளியிட்டுள்ளது.