இந்த தண்டனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் பொன்சேகா உறுதி
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு தண்டனை விதிக்கும் எந்தவொரு சட்ட விதிகளும் நாட்டில் இல்லை, இதை நாம் நம்பப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான உலகளாவிய பார்வையும் தண்டனையும் வேறுபட்டவை. இந்தியாவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கறிஞருக்கு ஒரு இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், அபராதம் செலுத்த அவர் மறுத்துவிட்டார், அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார், என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.