வெளியேற தயாராக இருங்கள்... பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு எச்சரிக்கை
கடும் வெப்ப அலை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ வியாபித்து வரும் நிலையில், மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lytton கிராமம் மொத்தமாக சேதமடைந்துள்ளது. பெரும்பாலான குடியிருப்புகள் இனி வசிக்க முடியாதபடி உருக்குலைந்துள்ளது.
இதுவரை இருவர் இறந்ததாகவே அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தீ பரவி வரும் நிலையில், கிராமத்தினுள்ளே செல்ல முடியாமல் அதிகாரிகள் தத்தளித்து வருகின்றனர்.
மேலும், மாகாணம் இன்னொரு மிக மோசமான கோடை காலத்தை எதிர்கொள்ள இருப்பதாகவும், முக்கிய பகுதிகளில் மக்கள் எந்த நேரமும் வெளியேற தயாராக இருத்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசரம் கருதி வெளியேற நேர்ந்தால், பணம், காப்பீடு ஆவணங்கள், மிக முக்கியமான ஆவணங்கள், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பான திட்டமிடல், முதலுதவிக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகள்,
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 4 லிற்றர் குடிநீர் கருத வேண்டும் எனவும் கெட்டுப் போகாத உணவுகள் மற்றும் மொபைல் சார்ஜர் உள்ளிட்டவைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.