பேரிடரில் இருந்து மீள உதவ தயார்; பிரான்ஸ் அதிபர்
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3.32 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக கூறிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron), கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுடன் பிரான்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பேரிடரில் இருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகைகளிலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டன், கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.