அவசர அவசரமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்: பின்னர் ஏற்பட்ட துயரம்
தெற்கு ஆல்பர்ட்டா பகுதியை சேர்ந்த ஒருவர் அவசர அவசரமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொண்டு அவதிக்குள்ளான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த நபர் ஒருவார காலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தெற்கு ஆல்பர்ட்டா பகுதியை சேர்ந்த Rodney McAllister என்பவர் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி எனப்படும் மூன்றாவது டோஸ் பெற்றுக்கொண்டார்.
ஆனால் அதுவே அவருக்கு நீண்ட கால உடல்நல அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இரண்டு வாரங்கள் அதன் தாக்கம் பெரிதாக தெரியவில்லை எனவும், ஆனால் மூன்றாவது வாரம் தாம் சிக்கலில் இருப்பதாக உணர்ந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Blairmore பகுதியில் குடியிருக்கும் 56 வயதான Rodney McAllister முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர். ஆனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு 12 வாரங்களுக்கு பிறகு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை அவர் போட்டுக்கொண்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்திலேயே அவருக்கு அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு மற்றும் படபடப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு பிறகு, அக்டோபர் 5ம் திகதி மருத்துவமனையை நாடியுள்ளார். சுமார் ஒருவார காலம் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த McAllister பின்னர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
இதுவரை முழுமையாக தாம் குணமடையவில்லை எனவும், மிகவும் சோர்வாகவும் தளர்ச்சியுடனும் உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மது, புகை உள்ளிட்ட எந்த பழக்கங்களும் தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அவசரப்பட்டிருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.