ஐம்பது வயதுடைய தம்பதிகள் இருவரின் சடலங்கள் மீட்பு
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஐம்பது வயதுகளையுடைய தம்பதிகள் இருவரின் சடலங்கள் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தம்பதிகள் உயிரிழந்துள்ளனர் . மார்செயின் (Marseille) 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான துல்லியமான தகவல்கள் தெரியவரவில்லை என்றபோதும், முதல்கட்ட விசாரணைகளின் படி, கணவர் முதலில் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தாமும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை Direction départementale de la sécurité அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை காரணமாக 146 பெண்களும், 2020 ஆம் ஆண்டில் 102 பெண்களும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.