நூலகம் செல்வதாக சென்ற பல்கலைக்கழக மாணவர்... 14 ஆண்டுகளாக காத்திருக்கும் குடும்பம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி பகுதியில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இளைஞர் தொடர்பில் பொதுமக்களிடம் பொலிசார் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் அசிம் சவுத்ரி என்ற 24 வயதேயான மாணவன், பல்கலைக்கழக நூலகம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக அசிம் சவுத்ரி குடியிருப்புக்கு திரும்பவில்லை. இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், சம்பவத்தன்று மாணவர் அசிம் சவுத்ரிக்கு என்ன ஆனது என்பது குறித்து கண்டிப்பாக சிலருக்கு தெரிய வாய்ப்புள்ளது.
அவர்கள் உண்மையை மறைத்து வருவதாக பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஜூலை 20 அன்று குடியிருப்பை விட்டு வெளியேறிய அசிம் சவுத்ரி, வழக்கமாக செல்லும் 135 இலக்கம் பேருந்தில் சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் அசிம் சவுத்ரி இறங்கியதும், விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து அசிம் சவுத்ரி எங்கே சென்றார், என்ன ஆனால் என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
சம்பவத்தன்று அசிம் சவுத்ரி குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், ஜூலை 21 அன்று குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
நீண்ட 14 ஆண்டுகளாக தேடியும் இதுவரை பொலிசாருக்கு உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், திங்களன்று மீண்டும் பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர். அசிம் சவுத்ரி தொடர்பில் கண்டிப்பாக சிலருக்கு உணமை தெரிய வாய்ப்புள்ளதாக நம்பும் பொலிசார், இந்த வழக்கை முடிக்க தங்களை உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனடாவை பொருத்தமட்டில் ஆண்டுக்கு 70,000 முதல் 80,000 பேர்கள் வரை காணாமல் போகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் 7 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
சில வழக்குகள் பல ஆண்டுகளாக துப்புத்துலங்காமல் உள்ளது என்றே பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றனர்.