கிரீஸில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு; வீதிக்கு இறங்கிய மக்கள்
கிரீஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் மூண்டதையடுத்து பொது மக்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் பொலிசார் கலைத்தனர்.
அங்கு இம்மாத முற்பகுதியில் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விரைவில் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முறை கொண்டு வரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின்முன் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தேசிய கொடிகளை உயர்த்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பொலிசாரும், பொதுமக்களும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து பொது மக்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் பொலிசார் கலைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.