உடனே நாடு திரும்புங்கள்.. தங்கள் மக்களை எச்சரிக்கும் அமெரிக்கா.!
அமெரிக்க அரசு இந்தியாவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் கிடைக்கும் விமானங்களின் மூலமாக விரைவாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்கா தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் அமெரிக்க மக்களை கிடைக்கும் விமானங்களின் வழியாக உடனடியாக நாடு திரும்புமாறு கூறியுள்ளது.
மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை, ஏர் இந்தியா மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்றவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வாரமும் நேரடியான விமானங்களை அதிகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிராங்க்பர்ட், பாரிஸ் மற்றும் தோஹா மூலமாக லுப்தான்சா ஏர் பிரான்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸிலும் கூடுதலான விமானங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே இந்தியாவில் இருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்கள் விமான நிறுவனங்களின் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.