பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை உயர்வு !
பிரித்தானியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எரிபொருள் விலை உச்சம் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், எரிப்பொருள் உட்பட அனைத்து பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு, நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.36 பவுண்ட் எட்டியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பானது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின் படி, பெட்ரோல் விலை ஒரு வாரத்தில் 0.91p(லிட்டருக்கு) உயர்ந்து இன்று, அது 136.1p ஆகவும், டீசல் விலை 137.9p-யில் இருந்து 139.2p ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பின், பெட்ரோலின்((136.9)) விலை மிகவும் அதிக அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் இனி கிடைப்பது கடினம் என்பதால், மக்கள் சேமித்து வைக்க துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் பிரித்தானியாவில் எரிபொருளின் திடீர் விலையேற்றத்திற்கு இதுவும் ஒருவகை காரணம் என்றும் கூறப்படுகிறது.