பிரான்ஸில் ஐந்து ஆண்டுகளின் பின்னர் அதிகரித்த விலை!
பிரான்ஸில் ஐந்து ஆண்டுகளின் பின்னர் கோப்பியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், தென் அமெரிக்காவில் மோசமான அறுவடையின் விளைவுமே கோப்பி விலை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டில், அராபிகா கோப்பி விலை 39.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கோப்பி விலையை 10-15 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாரிஸ் விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “இதுவரை எனக்கு தெரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் ஒரு போதும் விலையை உயர்த்தவில்லை, ஆனால் இப்போது எங்களுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை உலகின் மிகப்பெரிய கோப்பி உற்பத்தியாளரான பிரேசிலில் நீண்ட காலமாக உறைபனி வெப்பநிலை மற்றும் வெள்ளம் காரணமாக கோப்பி அறுவடையை அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை போக்குவரத்து செலவு ஒரு கொள்கலனுக்கு சராசரியாக 3,000 யூரோவிலிருந்து 7,000 யூரோவாக உயர்ந்ததுடன், அதிக தேவை மற்றும் ஆரம்பத்தில் கொரோனா முடக்கநிலையின் போது கப்பல் துறைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக சுய சேவை காபி இயந்திரத்தின் விலையும் ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.