மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள அபாய நிலை!
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா வைரஸ் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வலி, வயிற்றுப்போக்கு , சில நேரங்களில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காட்டும் கொடிய வைரஸ் பரவலை கினியா நாட்டின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கொங்கோவும் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது
. கினியா அரசாங்கம் கடந்த ஞாயிறு எபோலாவின் புதிய பரவலை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேற்கு ஆபிரிக்காவில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் வெளிவந்துள்ளது.
இதுவரை மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் ஏழு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பிராந்தியத்தில் 2013 முதல் 2016 வரை தொற்றுநோய் பரவல் ஏற்பட்டு 11,300 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.