மெக்சிகோவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து! உடல் நசுங்கி 19 பேர் பலியான சோகம்
மெக்சிகோவில் லாரி ஒன்று ஏற்படுத்திய கோர விபத்தில் சுமார் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய மெக்சிகோ சால்கோ நகராட்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் எதிரே சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதியது. அது மட்டும் இல்லாமல் லாரிக்கு பின்புறம் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் சிக்கி சரக்கு லாரி ஓட்டுனர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சில வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.