ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதலாவது மின்சாரக் கார் அறிமுகம்
பிரபல சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதலாவது மின்சாரக் காரை உலகளவில் இன்று அறிமுகப்படுத்தியது. பிரபல முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இன்று தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தது.
பல ஆண்டுகளாக எலெக்ட்ரிக் காரை கான்செப்ட் (மாதிரி) மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தி அதன் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த நிலையில் ஒரு வழியாக நாளை அக்காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே அதன் முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்ய இருக்கும் நிறுவனம் ஆகும். நாளை அன்று பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் விஷன் நெக்ஸ்ட் 100 (Vision Next 100) அறிமுகமாக இருக்கின்றது. இது, சைலன்ட் ஷேடோ (Silent Shadow) எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அதிக சொகுசு வாகனமாக மட்டுமின்றி ஒற்றை முழுமையான சார்ஜில் மிக அதிக பயண தூரத்தை வழங்கும் வாகனமாகவும் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரின் அறிமுகத்தை நிறுவனத்தின் சிஇஓ டார்ஸ்டென் முல்லர்-ஓட்வோஸ் (Torsten Muller-Otvos) அவரது லிங்க்ட் இன் கணக்கு வாயிலாக அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளார்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு மின்சார காரானது 100Wh பேட்டரி தன்மையாக் கொண்டுள்ளதாகவும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோ மீற்றர் வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.