வான்கூவர் கத்தோலிக்க தேவாலய சுவரில் எழுதப்பட்ட வாசகத்தால் பரபரப்பு
வான்கூவரில் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் சுவர்களில் மர்ம நபர்கள் எழுதி வைத்திருந்த வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வான்கூவரில் அமைந்துள்ள புனித அகஸ்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலேயே மர்ம நபர்கள் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.
அதில், ஆவணங்களை வெளியிடுங்கள் எனவும், இன்னொரு பகுதியில் கொலைகாரர்கள் எனவும் எழுதி வைத்துள்ளனர்.
சமீபத்தில் கம்லூப்ஸ் பள்ளி வளாகத்தில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோபம் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது திரும்பியுள்ளது.
பள்ளி மாணவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில், போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஆனால், கம்லூப்ஸ் பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியில், போதிய ஆவணங்கள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே புனித அகஸ்டின் கத்தோலிக்க தேவாலயத்தில் கொலைகாரர்கள் என மர்ம நபர்களால் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால், எப்போதோ நடந்த சம்பவத்திற்காக தற்போதைய கத்தோலிக்க மக்களை தண்டிக்க வேண்டாம் என புனித அகஸ்டின் தேவாலயத்தில் தொடர்புடைய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, வெள்ளிக்கிழமை விக்டோரியா ராணியாரின் சிலையிலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.