வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்!
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வதற்கான 20 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உட்பட உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற கடுமையான போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

2006-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்றதற்குப் பின்னர், பொதுநலவாய மேடையில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் இலங்கை வெல்லும் 5-வது தங்கப் பதக்கமாக இது பதிவாகியுள்ளது.
சர்வதேச தடகள அரங்கில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த மற்றும் மகத்தான சாதனைகளில் ஒன்றாக ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி கருதப்படுகின்றது.