இந்தியா இலங்கை போன்ற நாடுகள் நமக்கு செய்த உதவிகளுக்கு பதிலுதவி செய்வது நம் கடமை... கனேடிய நகைச்சுவையாளர்
இந்தியா இலங்கை போன்ற நாடுகள் நமக்கு செய்துள்ள உதவிக்கு பதிலுதவி செயது நம் கடமை என்கிறார் கனேடிய நகைச்சுவையாளர் ஒருவர்.
தனக்கு மிகவும் பிடித்த நாடாகிய இந்தியா, கொரோனாவால் கஷ்டப்படுவதைப் பார்ப்பது தனக்கு கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ள கனேடிய நகைச்சுவையாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான Russell Peters (50), அது தன்னை மிகவும் பாதிப்பதாகவும், அதற்கு உதவுவதற்காக என்ன செய்வது என தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இந்தியாவை உலகம் மூன்றாவது நாடாக பார்க்கும் நிலையிலும், இந்தியா கனடாவுக்கு உதவியது, வட அமெரிக்காவுக்கு உதவியது, உலகின் மற்ற நாடுகளுக்கு உதவியது. நாம் கஷ்டப்படும்போது இந்தியா நமக்கு உதவியது. இப்போது இந்தியா கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வட அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஊழியர்களைப் பாருங்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்காசியர்கள். அவர்கள், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நமக்கு ஏராளம் மருத்துவர்களைக் கொடுத்துள்ளார்கள்.
அவர்கள் நம் நாட்டு மக்களுக்கு பெருமளவில் உதவியிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு செய்த உதவிக்கு பதிலுதவி செய்வது, அவர்கள் நமக்குச் செய்ததை அவர்களுக்கு திருப்பிச் செய்வது, நம்மால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்கிறார் Russell.