உக்ரைன் மீது கொத்தணி குண்டுகளை ரஷ்யா வீசியதாக குற்றச்சாட்டு
வடகிழக்கு உக்ரைனில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக புதிய அறிக்கை கூறுகிறது.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் பாதிப்பு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கையின்படி,
உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் நகரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்யா நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தின் மீது மாஸ்கோ கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் கார்கிவில் குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் வீசப்படுவது கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஆகும், கொத்து குண்டுகளால் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றது மற்றும் காயப்படுத்தியது, மேலும் இது போர்க்குற்றங்களாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கார்கிவில் ரஷ்ய துருப்புக்கள் 9N210 மற்றும் 9N235 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் சிதறக்கூடிய கண்ணிவெடிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.
கொத்து குண்டுகள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள2மை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் அப்பாவி மக்கள்மீது ராஜபக்க்ஷ அரசாங்கம் கொத்தணி குண்டுகளை வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.