உக்ரைனின் 4 பிராந்தியங்களில் ரஷ்யா இணைத்தது பயனற்றது! ஜெலன்ஸ்கி
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் போரை தொடுத்து வருகின்றது.
8 மாதங்களை எட்டியும் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில் போரில் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களில் ரஷ்யா பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
சர்வதேச சட்டத்துக்கு எதிரான இந்த இணைப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் உக்ரைன் பிராந்தியாங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) நேற்று கையெழுத்திட்டார்.
இது தொட்ர்பில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
"எங்கள் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எந்தவொரு ரஷ்ய முடிவும், எந்த ஒப்பந்தங்களும் பயனற்றவை. பயங்கரவாத நாட்டின் மதிப்பற்ற முடிவுகள் அவை கையெழுத்திடப்பட்ட காகிதத்துக்கு மதிப்பு இல்லை"