உக்ரைனில் உள்ள மேலுமொரு நகரை கைப்பற்றிய ரஷ்யா!
உக்ரைன் நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியிலிருந்து போரை தொடுத்தது வருகின்றது.
இந்த நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய துருப்புகள் ஏற்கனவே கைப்பற்றி விட்ட நிலையில் இன்று அந்த மாகாணத்தின் கடைசி முக்கிய நகரமான 'லிசிசான்ஸ்க்'கை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே ஷோய்கு கூறும் போது,
லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷ்ய துருப்புகள் இணைந்து நடத்திய போரில், லிசிசான்ஸ்க் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது" எனக் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.