ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக உலக சூழ்நிலைகள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. இதுவரை உலக அளவில் 25.12 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இதுவரை 50.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,211 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 76,19,596 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10,04,844 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.