'புதினுக்கு நரம்பில் வந்த கோளாறு'... 'இத்தனை வருட சாம்ராஜ்யம் தலைகீழாக மாறுமா'?... உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்யா
ரஷ்ய அதிபராக 2000 ஆம் ஆண்டு தொடங்கித் தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்துவிட்டார் விளாடிமிர் புதின்.
ரஷ்யா (Russia) என்றதும் நமது மனதில் முதலில் வருவது விளாடிமிர் புதினின் (Vladimir Putin) முகம் மட்டுமே. 2000 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை ரஷ்யாவைத் தனது கைக்குள் வைத்திருக்கிறார் புதின்.
இந்நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024-ம் ஆண்டும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் தற்போதே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த கேள்விகள் எழ பல்வேறு காரணங்கள் உள்ள நிலையில், முக்கிய காரணியாகப் பார்க்கப்படுவது அவரது உடல்நிலை மட்டுமே. அடுத்த மாதம் 7 ஆம் தேதி (அக்டோபர் 7) அதிபர் புதினுக்கு 69 வயதாகிறது. அதோடு புதினுக்கு ஏற்பட்டுள்ள நரம்பியல் கோளாறு அவர் அடுத்து அதிபராகும் வாய்ப்பிற்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் புதின் இல்லையென்றால் அடுத்து யார் அதிபர் ஆவார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
தற்போது அதற்குப் பதிலும் கிடைத்துள்ளது. ரஷ்ய அதிபரின் அபிமானம் பெற்றவரான அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செகெய்யின் (Sergey Shoigu) பெயர் அதிபர் போட்டிக்கான ரேஸில் முதலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. செர்கெய் ஷோய்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவரது பிறப்பிடம் துவா. இது வடமேற்கு சீன எல்லையை ஒட்டியுள்ளது.
இந்த பிராந்தியம் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பெயர் போனது. செர்கெய் 1990களில் இருந்தே அரசியலில் உள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் அவசரக்கால அமைச்சராக இருந்தார். பின்னாளில் கிரிமியா நாட்டை இணைக்கும் விவகாரத்திலும், சிரிய அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சியைக் காப்பாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
66 வயதான செர்கெய் அவ்வப்போது புதினுடன் மீன் பிடித்தலிலும் வேட்டையாடுதலிலும் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாவதுண்டு. இது மறைமுகமாக புதின் செர்கெயை தனது அரசியல் வாரிசாக வெளி உலகிற்குக் காட்டி வருகிறார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.