உக்ரைன் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய ரஷ்யா!
Ukraine - வடக்கு Chernihiv பகுதியில், ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 3,500 கட்டிடங்கள், முக்கியமாக குடியிருப்பு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலால் அழிக்கப்பட்டும், சேதமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை Ukraine இன் நிலைமை தொடர்பில் சமீபத்திய புதுப்பிப்பில் UK பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா பீரங்கிகளைப் பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுள்ளது.
மேலும், வரையறுக்கப்பட்ட இலக்கு கையகப்படுத்தும் வெறியில் இவ்வாறு குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
டான்பாஸில் அதன் முன்னேற்றத்தில் வேகத்தை மீண்டும் பெற, ரஷ்யா வரும் வாரங்களில் பாரிய பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்தும் நம்பியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.