உக்ரைன் மீது ரஷ்யாவின் திடுக்கிடவைக்கும் தாக்குதல் வியூகம்
ரஷ்யா நடந்தி வரும் உக்ரைன் போரில் தனது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்திகதி அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்தது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
இந்நிலையில், தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக உக்ரைனின் நாட்டின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கை அழிக்க பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் புடின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும். இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சல் (டாகர்) ஏவுகணை ஆகும்.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய நிலத்தடி கிடங்கை அழித்தது" என்று கூறியுள்ளது.