நேட்டோ விடுத்த அழைப்பால் கோபத்தின் உச்சத்தில் ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துள்ள ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் முன்னதாக நேட்டோ அமைப்பில் இணையவிருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரினால் உக்ரைனின் பல பகுதிகள் நாசமாகியுள்ளதுடன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளது நேட்டோ. ஏற்கனவே ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய உள்ளது முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த அழைப்பு ரஷ்யாவை மேலும் உக்கிரமடைய செய்யும் என்றும், இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடையலாம் என்றும் கூறப்படுகின்றது.