பின்லாந்து நாட்டுக்கான மின்சார சப்ளையை நிறுத்தும் ரஷ்யா!
பின்லாந்து நாட்டுக்கான மின்சார சப்ளையை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பின்லாந்தும், ரஷ்யாவும் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.
நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவு செய்த நிலையில் அதற்கான விண்ணப்பிக்கும் திட்டத்தை கைவிடுமாறு பின்லாந்துக்கு ரஷ்யா முன்னர் எச்சரிக்கை விடுத்துயிருந்தது,
இந்நிலையில், நோட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பின்லாந்துக்கு மின்சார சப்ளையை நிறுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டனங்களை செலுத்த முடியாது என பின்லாந்து அறிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து 10 விழுக்காடு மட்டுமே மின்சாரம் வாங்குவதால் எந்த பாதிப்பும் இல்லை என பின்லாந்து தெரிவித்துள்ளது.