ரஷ்யா- உக்ரைன் மோதல்; மேற்கத்திய நாடுகள் மீது குற்றம் சுமத்தும் பெலாரஸ் அதிபர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் போரானது இன்று பத்தாவது நாளாகவும் தொரும் நிலையில், பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) , ரஷிய அதிபர் புதினை (Vladimir Putin) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின்போது உக்ரைன் உடனான மோதல் குறித்தும், அதில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) ,
மேற்கத்திய நாடுகள்தான், ரஷியாவையும், பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சுமத்தினார்.
“ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் எங்களை உக்ரைனில் போருக்குத் தள்ளுகிறார்கள். இந்த மோதலில் பெலாரஸ் தலையிட்டால் அது, அவர்களுக்கு பரிசாக இருக்கும்” என அவர் மேலும் கூறினார்.