ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ தலைவர் பதவி ரத்து!
போலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோந்பை ப்ளே-ஆப் சுற்று விளையாட்டுகளில் ரஷ்யாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து இன்று நான்காவது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து அனைத்து திசைகளில் இருந்து ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷ்யப் படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஏற்கனவே பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் புதின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். 2014ஆம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான எட்டாவது டான் விருதையும் விளாடிமிர் புதின் பெற்றுள்ளார்.
இதேபோல், போலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோள்பை ப்ளே- ஆப் விளையாட்டுகளில் ரஷ்யாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.