உக்ரைன் உயிர்ச் சேதங்கள் தொடர்பில் ஐ.நாவின் பகீர் தகவல்
உக்ரைனில் சிவிலியன்களின் உயிர்ச் சேத விபரங்கள் சரியானவை கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் உக்ரைன் பிரதானி Matilda Bogner தெரிவித்துள்ளார்.
ரஸ்ய தாக்குதல்களினால் இதுவரையில் 3381 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3680 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த புள்ளி விபரத் தகவல்களை விடவும் பல மடங்கு உயிர்ச் சேதங்கள் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு மற்றும் காயமடைதல் தொடர்பில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவை துல்லியமான தகவல்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் மிகவும் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.